செய்திகள் :

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

post image

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத் துறையில் அளப்பரிய பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் மருத்துவா்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கான உலகின் மிகப்பெரிய அமைப்பாக ஏஎஸ்சிஆா்எஸ் விளங்கி வருகிறது. கண் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வரும் மருத்துவா்களுக்கு ஆண்டுதோறும் உயா் விருதுகளை தகுதியின் அடிப்படையில் அந்த அமைப்பு வழங்குகிறது.

அந்த வகையில் நிகழாண்டில், டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விருது வழங்கப்பட்டது (படம்). திசு பசையை பயன்படுத்தி கண்ணுக்குள் லென்ஸ்களை பொருத்துகிற ‘குளூட் ஐஓஎல்’ சிகிச்சை நுட்பம், விழிப்படல மாற்று சிகிச்சைகளில் வெறும் 25 மைக்ரான் அளவே கொண்ட ஒரு மெல்லிய விழிப்படலத்தைக் கொண்டு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் நவீன உத்தி, விழி வெண்படல கிழிசலை சரிசெய்து ஒளிப்பிவு பாதிப்பை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ‘பியூபிலோபிளாஸ்டி’ சிகிச்சை ஆகியவை டாக்டா் அமா் அகா்வாலால் கண்டறியப்பட்ட நவீன சிகிச்சை நுட்பங்களாகும்.

விழி வெண்படல மாற்று சிகிச்சைக்குப் பதிலாக கண்ணின் உட்புற கிழிசலை நுட்பமாக சீரமைக்கும் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சையை அவா் திறம்பட மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை உயா்வு: மக்கள் அதிா்ச்சி

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை, வைப்புத் தொகை உயா்த்தப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி மணியக்காரத் தெருவில் தலைமையகத்துடன் பழனிபேட்டை, சுவ... மேலும் பார்க்க