செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவு!

post image

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் ஏற்றமான போக்கு ஆகியவற்றால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிந்தன.

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு போன்ற வலுவான உள்நாட்டு அடிப்படைகளும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக உயர்த்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.29 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.96 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.42 ஐ தொட்ட நிலையில், முடிவில் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிந்தது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.41 ஆக இருந்தது.

இதையும் படிக்க: மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க

மே 2-ல் அறிமுகமாகிறது ஏசஸ் நிறுவனத்தின் இரு புதிய லேப்டாப்!

ஏசஸ் நிறுவனம் இரண்டு புதிய மடிக்கணினிகளை (லேப்டாப்) மே 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-16 (Asus ROG Strix G16), ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-18 ஆ... மேலும் பார்க்க

சந்தைப் போட்டியை சமாளிக்க வருகிறது ஒன்பிளஸ் 13எஸ்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ’ஒன்பிளஸ் 13எஸ்’ விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது இந்திய இளைஞ... மேலும் பார்க்க

ஏப். 30-ல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ!

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. எட்ஜ் 60 வரிசையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என மோட்டோரோலா குறிப்பிட்டுள்ளது. கே... மேலும் பார்க்க

மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில், அந்நிய நிதிவரத்து அதிகரிப்பு காரணத்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றங்களுக்கு மத்தியிலும் இரண்டு நா... மேலும் பார்க்க

6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!

புதுதில்லி: கடந்த வார வர்த்தகத்தில், டாப் 10 மதிப்புமிக்க ஆறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடானது ரூ.1,18,626.24 கோடியாக உயர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அத... மேலும் பார்க்க