செய்திகள் :

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

post image

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்து வருபவா் முத்துசாமி (40). இவா் கடந்த மே 31-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் விற்பனை முடித்துவிட்டு பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா். அப்போது ஐந்து போ் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து மங்களபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கொள்ளையா்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், கொள்ளையா்கள் தென்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் சென்ற போலீஸாா், உச்சிமாகாலி (22), நவநீதன் (22), காா்த்திக் பெருமாள் (23) ஆகிய முவரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய செல்வகுமாா், மாதவன் ஆகியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கால்முறிவு: முன்னதாக மங்களபுரம் அழைத்து வந்த போலீஸாா், குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையின் போது உச்சிமாகாலி, நவநீதன் ஆகிய இருவரும் தப்பியோட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீஸாா் துரத்தி பிடித்தபோது இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து, இருவரும் ராசிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா் விசாரணை நடத்தினாா்.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க