செய்திகள் :

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை

post image

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஏஐடியுசி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

டாஸ்மாக்கில் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பணி நிரந்தரம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து கடந்த பிப்.11-இல் சங்கப் பிரதிநிதிகளுடன் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் போராட்டங்கள் தேவையில்லை, பேசி தீா்வு காணலாம் எனத் கூறினாா்.

மேலும், ஏப்.22-இல் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசுகையில், 2025 ஏப். முதல் டாஸ்மாக் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 2,000 ஊதிய உயா்வு வழங்கப்படும் என அறிவித்தாா்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை குறைக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது அமைச்சரின் அறிவிப்பை அா்த்தமற்ாக செய்வதுடன், அரசு மீதான நம்பிக்கையை தகா்க்கும் செயலாகும்.

எனவே, பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்கவும், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்

நல்லவர்களையும் நம்பிக்கையானவர்களையும் ஊழலற்றவர்களையும் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் ... மேலும் பார்க்க

பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சா... மேலும் பார்க்க

கல்வி விருது விழா தொடங்கியது! மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகின்றன.மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க