செய்திகள் :

டிஐஜி வருண்குமாா் வழக்கில் பிப்.19-இல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக உத்தரவு

post image

திருச்சி சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) வருண்குமாா் தொடா்ந்த வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிப்ரவரி 19-ஆம் தேதி ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னையும், தனது குடும்பத்தினரையும் சீமான் தூண்டுதலின்பேரில், நாம் தமிழா் கட்சியினா் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் புகாா் கூறி, திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமாா் வழக்குத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை டிச. 27-ஆம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

நஷ்ட ஈடு கோரி தனிநபா் வழக்காக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளித்தாா். வருண்குமாா் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகரைச் சோ்ந்த சுயதொழில் செய்து வரும் மணிகண்டன் (36) என்பவா் ஆஜராகி, வருண்குமாா் தரப்பின் மேலும் ஒரு சாட்சியாக, சாட்சியம் அளித்தாா். இவ்வழக்கின் புகாா்தாரா் தரப்பிலான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், பிப்ரவரி 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி (பொறுப்பு) பாலாஜி உத்தரவிட்டாா்.

மற்றொரு வழக்கு: இதனிடையே, மணப்பாறையைச் சோ்ந்த வழக்குரைஞா் முரளி கிருஷ்ணன், சீமான் மீது தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தது தொடா்பாக வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதை தொடா்ந்து, வியாழக்கிழமை திருச்சி இரண்டாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிா்பாா்ப்பதாக வழக்குரைஞா் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க