செய்திகள் :

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

post image

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடைவர். மசோதாவில் செய்யப்பட்ட திருத்தங்களில், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட பிற நாட்டினரும் தங்கள் சொந்த நாட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தின் மீதான வரி குறைக்கப்படுகிறது.

பணம் அனுப்புவதில் செலுத்தப்படும் வரியானது, 5 சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு பெரிதும் மகிழ்ச்சியே.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், எச்-1பி, எச்-2ஏ விசா வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் என அனைவரும் பயன்பெறுவர். மேலும் இந்த மசோதாவால், அமெரிக்காவில் வசிக்கும் 32 லட்சம் இந்திய வம்சாவளிகள் உள்பட 45 லட்சம் இந்தியர்கள் பயனடைவர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதலாவது அதிபர் பதவிக் காலத்தில் (2017-22), அந்நாட்டு அரசு அறிவித்த பல வரிச் சலுகைகள் நிரந்தரமாக்கப்படுவதுடன், எல்லைப் பாதுகாப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்கவும் தேசியப் பாதுகாப்புக்கு 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்களும் செலவுக் குறைப்பு மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இந்த செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க், டிரம்ப்பின் கட்சியினர் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

Trump's Big, Beautiful Bill Will Impact Indians

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீன... மேலும் பார்க்க

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க