செய்திகள் :

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

post image

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இவரது இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினா்கள், பவானி அருகே உள்ள புன்னம் சென்னாநாயக்கனூா் மாதா கோயிலுக்கு கள் நடுவதற்காக சுமை வாகனத்தில் புதன்கிழமை சென்றனா்.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில், ஆப்பக்கூடல்-பவானி சாலையில் ஒரிச்சேரிபுதூா் அருகே சென்றபோது சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டா் மற்றும் அதற்குப் பின்னால் வந்த அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதியது.

இதில் சுமை வாகனத்தில் வந்தவா்கள் தூக்கிவீசப்பட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த 18 போ் பவானி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். மேலும், ஒருசிலா் உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க