செய்திகள் :

டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

post image

சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.

வந்தே பாரத் முதல் டெக்கான் குயின் வரை பல ரயில்களை இயக்கி சாதனை படைத்த இவர், தொழில்மீதான ஆர்வம், உறுதிப்பாடு, பாலின வேறுபாடு, தொழிலில் பெண்களுக்கான சவால்கள் என பலவற்றை உடைத்தெறிந்து, எண்ணற்றக் கனவுகளுடன் இருக்கும் மகளிருக்கு எந்தத் தடைகளையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட நல் வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.

1988ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் சுரேகா இணைந்தார். 1989ஆம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராக பணியாற்றியவர், படிப்படியாக முன்னேறி, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில்களை இயக்கினார். பத்தாண்டுகளில் டெக்கான் குயின் ரயிலை இயக்கினார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மற்றொரு சாதனையை அவர் படைத்தார். சோலாபூர் - மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கியதன் மூலம், அதிவேக ரயில் ஓட்டுநரான பெண் என்ற சாதனையையும் பெற்றார். அப்போது, அவருக்கு மிகச் சிறப்பான பாராட்டுகள் குவிந்தன. நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்கும், இந்திய மகளிருக்கும் பெருமை சேர்த்த தருணமாகவும் அது மாறியது.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் சுரேகா. விவசாயக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்தார். இவரது உத்வேகம், ஆண்கள் கோலோச்சிய துறையில் சாதிப்பது என்ற இலக்கு போன்றவை இந்த சாதனைகளுக்குக் காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.

மத்திய ரயில்வே, சுரேகா யாதவ் பற்றி தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில், சுரேகா யாதவ், ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர், செப்டம்பர் 30ஆம் தேதி, தன்னுடைய 36 ஆண்டு கால பணியிலிருந்து ஓய்வுபெறவிருக்கிறார்.

மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், தடைகளை உடைத்தெறிந்து, எண்ணற்ற பெண்களுக்கு உத்வேகமாக இருப்பவர், எல்லா தடைகளையும் தாண்டி எந்தக் கனவையும் பெண்கள் அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இந்திய ரயில்வேயில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முறைக்கு எப்போதும் இவரது வாழ்க்கைப் பயணம் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது 1500 பெண் ரயில் ஓட்டுநர்கள் உள்ளனர். இதற்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர் சுரேகா யாதவ்.

Surekha Yadav has made history 36 years ago as the first woman train driver in Asia. She will complete her career on September 30.

இதையும் படிக்க... செப்.21 சூரிய கிரகணம்: சூரிய உதயமே வான அதிசயம் காட்டும்!

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அம... மேலும் பார்க்க

ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்ற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததாக காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவு கொள்கை, வாக்குத் திருட்டு, அதானி குழும விவ... மேலும் பார்க்க

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்டில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க