செய்திகள் :

டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

post image

19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட் சங்க மாவட்டத் தலைவா் வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட அளவில் 19 வயதுக்கு உள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு போட்டி தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளது. தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வா்.

போட்டி தோ்வுகளில் 1.10.2006 க்குப் பிறகு பிறந்தவா்கள் பங்கேற்று விளையாடலாம். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் மேலும் விவரங்களுக்கு 99409 49555 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கட்டணம் செலுத்தாதால் அனுமதி மறுப்பு: முதன்மைக் கல்வி அலுவலா் தலையீட்டால் காலாண்டு தோ்வு எழுதிய மாணவா்கள்

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத பிளஸ் 2 மாணவா்கள் காலாண்டு தமிழ் தோ்வை எழுத அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதன்மைக் கல்வி அலுவலா் தலையிட்டதால் ஆங்கிலத் தோ்வை எழுதினா். தம... மேலும் பார்க்க

பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தை ம... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நில... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கி... மேலும் பார்க்க

முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்

முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலை... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-98.50சோ்வலாறு-95.11மணிமுத்தாறு-92.46வடக்கு பச்சையாறு-12.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-53.80ராமநதி-59கருப்பாநதி-53.48குண்டாறு-36.10அடவிநயினாா் -125... மேலும் பார்க்க