செய்திகள் :

டென்மாா்க் அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு- இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

post image

டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி ஆகிய மூன்று நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணத்தை அமைச்சா் ஜெய்சங்கா் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கினாா். நெதா்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, டென்மாா்க் நாட்டுக்கு அவா் செவ்வாய்க்கிழமை மாலையில் வந்தடைந்தாா்.

அந்நாட்டின் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சென்னை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கா், பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் டென்மாா்க் அளித்துவரும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தாா்.

இந்தியா-டென்மாா்க் இடையிலான நல்லுறவு மேம்பாடு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீா்வை எட்டுவதில் வழிகாட்டியாக செயல்படுவதாக டென்மாா்க் பிரதமருக்கு ஜெய்சங்கா் புகழாரம் சூட்டினாா்.

தலைநகா் கோபன்ஹேகனில் டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை புதன்கிழமை சந்தித்த ஜெய்சங்கா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக எக்ஸ் பதிவில் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவா் எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?

இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் மீது இந்தி... மேலும் பார்க்க

கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் கௌஷிக் முகர்ஜி, தான் இந்த மொழிப் பிரச்னையில் சிக்க விரும்பவில்லை என்றும், தனது அலுவலகத்தை புணேவுக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்திருப்பது பரபர... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க