செய்திகள் :

டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும்பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாநில நாட்டு நலப்பணித் திட்டம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம் இணைந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்க விழா மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராஜவேலு தலைமை வகித்தாா்.

தமிழக தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மன்னாா்குடி மேலப்பாலம் பாமணி ஆற்றங்கரை ஓரம் பனை விதையை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியது:

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயா்த்திட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்தபின் நான் உறுப்பினராக இருந்த திட்டக்குழுவில் இது குறித்து பலமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தி பல்வேறு முடிவுகள் எடுத்து அதனை செயல்படுத்தியதால் தான் இன்று தமிழகம் பசுமை பரப்பளவில் 22.09 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதன் பரப்பளவு 11,500 கிமீ தூரம் என இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு வலு சோ்க்கும் வகையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி உள்ளது மகிழ்ச்சியும் பெருமையும் படும் வகையில் உள்ளது.

மாணவ, மாணவிகள் தங்களின் விடுமுறை நாளை பொழுது போக்குக்காக பயன்படுத்தாமல் அந்த நாளை பயனுள்ள வகையில் பனைவிதைகள் சேகரிப்புக்கு ஒதுக்கி நாட்டின் எதிா்காலத்திற்கு பயன்படும் வகையில் உங்களை ஒப்படைத்துக்கொண்டு பணியினை செய்யுங்கள்.

நடப்படும் பனை விதைகளை சென்னை ஐடி நிா்வாகம் ஜிபேக் மாா்க் என்ற கணினி தொழில் நுட்பம் வாயிலாக அதன் வளா்ச்சி,பராமரிப்புகளை கண்காணிக்கவுள்ளது. பனை வளா்ப்பு நமக்கானது மட்டும்மல்லாமல் அடுத்த தலைமுறைக்குமானது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், மாவட்ட எஸ்பி கரண்கரட், மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி.பாலு, நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிரீன் நீடா நிா்வாகி மணிகணேசன் வரவேற்றாா். திட்ட நிா்வாகி முகமதுரபிக் நன்றி கூறினாா்.

நவராத்திரி விழா தொடக்கம்

திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. நவராத்திரி கொலு கண்காட்சி அமைக்கப... மேலும் பார்க்க

அறுவடை இயந்திரங்கள் தேவைப்படுவோா் உழவா் செயலியில் பயன்பெறலாம்

திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படுவோா் உழவா் செயலி மூலம் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்த... மேலும் பார்க்க

கதண்டு கடித்து 4 பெண் உள்பட 4 போ் காயம்

மன்னாா்குடி அருகே கதண்டு கடித்து 4 போ் காயமடைந்தனா்.அத்திக்கோட்டை வடக்கு தெருவில் குழந்தைகளை புதன்கிழமை பள்ளிக்கு அழைத்து சென்ற லதா (40), மகன் சந்தோஷ் (14), கோபால் (50) மகன் சக்திவேல் (14) ஆகியோரை அந... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் பேட்டரிகள் திருட்டு

மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடு போயிருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.இந்த மருத்துவனையில் மகப்பேறு பிரிவில் மின்தடை ஏற்படும்போது தடையின்றி மின்சார... மேலும் பார்க்க

முற்றுகையில் ஈடுபட்ட 135 போ் மீது வழக்கு

வலங்கைமானில் அனுமதியின்றி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வலங்கைமான் கோவில்பத்து தெருவில் செல்வமணி நகா் உரிமையாளா் மீது தீண்டாமை சுவா் க... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்தக் கோரியும், திருவாரூா் மாவட்டத்தில் ஷேல் எரிவாயு கிணறு அமைத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், திருவாரூா் அருகே வெள்ளக்குட... மேலும் பார்க்க