செய்திகள் :

டெல்லியில் நடந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; பாசிட்டிவ் முடிவா?

post image

சமீப மாதங்களாக இந்தியா–அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக சூழல் நிலவவில்லை. இதற்கு அமெரிக்கா, இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் முக்கிய காரணம்.

இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர்.

நேற்று இந்தியா–அமெரிக்கா அதிகாரிகள் இடையே இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மோடி, ட்ரம்ப் - வெள்ளை மாளிகை
மோடி, ட்ரம்ப்

அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

"இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளர் திரு. பிரெண்டன் லின்ச் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு, செப்டம்பர் 16, 2025 அன்று இந்தியாவிற்கு வருகை தந்தது.

அவர்கள், இந்திய வர்த்தகத் துறை சிறப்புச் செயலர் தலைமையிலான அதிகாரிகளுடன், இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்த விவாதங்கள் நேர்மறையாகவும் எதிர்கால நோக்கத்துடனும் நடைபெற்றன.

இருதரப்பிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது." என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தின் அறிக்கை
இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தின் அறிக்கை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமி நடுரோட்டில் நிற்கப்போகிறார்'' - டிடிவி தினகரன் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மற... மேலும் பார்க்க

``சமூக அநீதிகளுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்'' - தந்தை பெரியார் குறித்து பினராயி விஜயன்

தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் எனச் சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளி... மேலும் பார்க்க

ADMK: `உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த காரணம்' - எடப்பாடி பழனிசாமியின் பதிவு வைரல்!

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதை சகித்துக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அப்போதே, கட்சிப் பொறுப்ப... மேலும் பார்க்க

``எடப்பாடி முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?'' - டிடிவி தினகரன் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(செப்.16)இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத... மேலும் பார்க்க

``இந்தியா மூன்றாம் நாட்டின் தலையீட்டை மறுக்கிறது என்று ரூபியோ சொன்னார்'' - பாக். போட்டு உடைத்த உண்மை

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதை எதிர்த்து, இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூ... மேலும் பார்க்க

``தந்தை பெரியார் இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!'' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் என சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளிலும்... மேலும் பார்க்க