செய்திகள் :

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

post image

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவாங்கி இருக்கிறார்.

அப்பெண் காதலர் தினத்தன்று தனது காதலனுக்கு ஆன்லைனில் பீட்ஸா ஆர்டர் செய்தார். ஒன்று, இரண்டு அல்ல. மொத்தம் 100 பீட்ஸாக்களை தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆர்டர் செய்தார். ஆனால் ஆர்டர் செய்யப்பட்ட பீட்ஸாக்களுக்கு அப்பெண் பணம் கொடுக்கவில்லை. கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை பயன்படுத்தி உள்ளார். யாஷ் சங்க்வி என்ற வாலிபர் முதலில் ஒரு பீட்ஸா வந்தவுடன் யார் ஆர்டர் செய்தது என்று ஆச்சரியம் அடைந்தார். பீஸ்ஸாவை கொண்டு வந்த நபர் பீட்ஸாவிற்கு பணம் கொடுக்கும்படி கேட்டபோதுதான் யாஷ் அதிர்ச்சியடைந்தார். மேலும் ஒரு பீட்ஸாவோடு அது நிற்கவில்லை.

தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. அதனை பார்த்து யாஷ் அதிர்ச்சியடைந்தார். எந்த பீட்ஸாவிற்கும் அதனை ஆர்டர் செய்தவர் பணம் கொடுக்கவில்லை. அதனை யார் ஆர்டர் செய்தது என்று விசாரித்தபோதுதான், அவரது முன்னாள் காதலி என்று தெரிய வந்தது. அவரின் முன்னாள் காதலி தனது மாஜி காதலனை பழிவாங்க இது போன்று 'கேஸ் ஆன் டெலிவரி' முறையில் பீட்ஸாவை ஆர்டர் செய்திருந்தார். இது தொடர்பான செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதும் நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை திட்டித்தீர்த்தனர்.

சிலர் பழிவாங்குவதற்காக இது போன்று அனுப்பி இருப்பதாக சிலர் தெரிவித்தனர். சிலர் இந்த அளவுக்கு அதிகப்படியான பீட்ஸாக்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர். இது விளம்பரப்படுத்தும் யுக்தி என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சிலர், இது உணவை வீணாக்கும் செயல் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதே போன்று மற்றொரு பெண் தனது முன்னாள் காதலனுக்கு ஸ்விக்கி மூலம் குப்பை பைகளை அனுப்பி இருக்கிறார். அதில் ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பி இருக்கிறார். அதில், "இன்ஸ்டாமார்ட்டிலிருந்து அனுப்பினேன், அதை அன்புடன் அணியுங்கள். அது பொருந்தவில்லை என்றால், எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் உங்களுக்கு பெரியவற்றை அனுப்புவேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி ஒருவர் உங்களுக்கு செய்தால், உங்கள் ரியாக்‌ஷன் என்ன? கமெண்ட் ப்ளீஸ்..!

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!

புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவ... மேலும் பார்க்க

Kumbh Mela: போக்குவரத்து நெரிசல்; கங்கையில் 275 கி.மீ படகில் பயணத்து கும்பமேளாவில் நீராடிய நண்பர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிரயக்ராஜ் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து லட்சக... மேலும் பார்க்க

Agra: ரூ.50,000 சன்மானம், டிரோன், 3 மாத தேடல்... தொலைந்த நாயைக் கண்டுபிடித்த தம்பதி; என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் வசிப்பவர் தீபயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்கள் ஆசையாக இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தனர். எங்குச் சென்றாலும் வளர்ப்பு நாயையும் கூடவே அழைத்துச் செல்வர். தீபய... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் பீர் விற்பனை - சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?!

ரஷ்ய மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை இடம்பெற செய்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று பத... மேலும் பார்க்க

Gujarat: தாய் இல்லாத தன் 6 குழந்தைகளைக் கூண்டில் வைத்துப் பாதுகாக்கும் தந்தை; என்ன காரணம் தெரியுமா?

தனது குழந்தைகளைச் சிங்கம் மற்றும் சிறுத்தை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கத் தனித்துவமான முயற்சியைக் கையாண்டுள்ளார் ஒருவர். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் தாய் இல்லாத தன் குழந்தை... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு டு ஆர்.சி.பி நியூ கேப்டன் - இந்த வார கேள்விகள்

த.வெ.க தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் பாதுகாப்பு, பி.எஸ்.என்.எல் (BSNL) லாபம், குடியரசுத் தலைவர் ஆட்சி, அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா, ஆர்.சி.பி அணிக்குப் புதிய கேப்டன் நியமனம் என இந்த வார சம்பவ... மேலும் பார்க்க