மகாத்மா காந்தி உருவப்படத்துடன் பீர் விற்பனை - சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?!
ரஷ்ய மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை இடம்பெற செய்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மகாத்மா காந்தி. இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றிருக்கும். இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதை தரும் பீர்பாட்டிலில் காந்தியின் உருவப்படம் அச்சிடப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
My humble request with PM @narendramodi Ji is to take up this matter with his friend @KremlinRussia_E . It has been found that Russia’s Rewort is selling Beer in the name of GandhiJi… SS pic.twitter.com/lT3gcB9tMf
— Shri. Suparno Satpathy (@SuparnoSatpathy) February 13, 2025
ரஷ்யாவில் தான் இவ்வாறு நடந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி இது தொடர்பாக ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நந்தினி சத்பாதியின் பேரனும் அரசியல்வாதியுமான சுபர்னோ சத்பாதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் காந்தியின் உருவம் இடம்பெற்றுள்ள பீர் பாட்டில் புகைப்படங்கள் உள்ளன. காந்தியின் பெயர்தான் அந்த பீர் பாட்டில்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலானதையடுத்து, காந்தியின் பெயரில் விற்பனையாகும் பீர் பாட்டில்கள் குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் பீர் பாட்டில் தயாரிக்கும் ரிவோர்ட் என்ற நிறுவனம் ஓராண்டுக்கு முன்பே காந்தி உருவப்படம் பொறிக்கப்பட்ட பீர் பாட்டில்களின் விற்பனையை நிறுத்தி விட்டதாகவும், சமூக வலைதளங்களில் பரவுவது பழைய பாட்டில்களின் புகைப்படம் என்றும் விளக்கம் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இருப்பினும் மகாத்மா காந்தியின் உருவம் மற்றும் கையொப்பத்துடன் கூடிய பீர் பாட்டில்களின் படங்கள் வைரலானதை அடுத்து, ரஷ்ய மதுபான உற்பத்தி நிறுவனமான ரிவோர்ட் மன்னிப்பு கேட்டுள்ளது.
மதுபானங்களை விற்பனை செய்வதில் காந்தியின் படம் தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதன்முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் 71வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டபோது இஸ்ரேலிய மதுபான நிறுவனம் இதே போன்ற சர்ச்சையில் சிக்கியது. அதன் பின்பு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது.