செய்திகள் :

டெவால்ட் பிரெவிஸ் விவகாரத்தில் நடந்தது என்ன? - அடுத்தடுத்து விளக்கம் கொடுத்த சிஎஸ்கே & அஸ்வின்

post image

ஐபிஎல் 2025 சீசனின் பாதியில், காயம் காரணமாக விலகிய குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க இளம் வீரர் `பேபி ஏபி' என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக 2.2 கோடி மதிப்பில் வாங்கியது.

அதைத்தொடர்ந்து தான் களமிறங்கிய போட்டிகளில் டெவால்ட் பிரெவிஸ், அடுத்த சீசனிலும் அணியில் தனது இடத்தை தக்கவைக்கும் வகையில் அதிரடி காட்டினார்.

டெவால்ட் பிரெவிஸ்
டெவால்ட் பிரெவிஸ்

இவ்வாறிருக்க, ஐ.பி.எல் சீசன் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், டெவால்ட் பிரெவிஸை சி.எஸ்.கே அணி வாங்கியது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனனில் பேசிய வீடியோ விவாதத்தைக் கிளப்பியது.

அந்த வீடியோவில் அஸ்வின், "பிரெவிஸை பல அணிகள் அணுகின. கூடுதல் தொகை அளிக்க முடியாமல், அளிக்க வேண்டாம் என ஒரு சில அணிகள் அவரை விட்டுவிட்டார்கள்.

பாதி சீசனில் அவரின் அடிப்படை தொகை ஓரளவுக்கு இருந்தது. இருப்பினும் இப்போது விளையாடினால் அடுத்த சீசனில் அவர் அதிக தொகைக்கு போவார் என ஏஜெண்ட்ஸ் கூடுதல் தொகை கேட்கவும், சி.எஸ்.கே அதைக் கொடுக்க தயாராக இருந்ததால் அணிக்குள் அவர் வந்தார்" என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகவே, விதிகளை மீறி சி.எஸ்.கே அதிக தொகை வழங்கியதாகப் பேச்சு எழுந்தன.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதாக வெடிக்கவே, “ `மாற்று வீரரின் சம்பளம், அவர் மாற்று வீரரின் ஒப்பந்த தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது' என்ற IPL விதிமுறைப்படி, குர்ஜப்நீத் சிங்கின் ஒப்பந்த தொகை 2.2 கோடி என்பதால், அதே அளவில்தான் பிரெவிஸ் கையெழுத்திடப்பட்டார்.

எந்த விதத்திலும் கூடுதல் தொகை வழங்கப்படவில்லை" என்று சி.எஸ்.கே நிர்வாகம் விளக்க அறிக்கை வெளியிட்டது.

சி.எஸ்.கே நிர்வாகம் விளக்க அறிக்கை
சி.எஸ்.கே நிர்வாகம் விளக்க அறிக்கை

அப்படியென்றால் யார் சொல்வது உண்மை என மேலும் கேள்விகள் எழுந்த வேளையில் அஷ்வின் தாமாக முன்வந்து, “என் கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

சரியான நேரத்தில் அவரை எடுத்தது சி.எஸ்.கே-வின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனப் பொருள்படும் வகையில்தான் பேசியிருந்தேன்.

விதிமுறைகளை சி.எஸ்.கே மீறவில்லை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை" என்று விளக்கமளித்து பிரெவிஸ் ஒப்பந்தம் தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Asia Cup: 'ஆசியக்கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது'- கேதர் ஜாதவ் சொல்வது என்ன?

ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐ... மேலும் பார்க்க

மூன்றே போட்டிகளில் கோலியின் சாதனையை முறியடித்த `பேபி ஏபி' பிரேவிஸ்; எப்படி சாத்தியமானது?

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.தென்னாப்பிரிக்க கிரிக்க... மேலும் பார்க்க

Gill: "அந்த 200 ரன்களுக்காக..." - நான்காவது முறை Player of the Month பெற்ற கில்

2025 ஜூலை மாதத்தின் பிளேயர் ஆஃப் தி மன்த் (Player of The Month) விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சும்பன் கில். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் பேட்ஸ்மேனாகவும்... மேலும் பார்க்க

Ashwin: சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறாரா? - அஷ்வின் கொடுத்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் வரை ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பின்னர் பல அணிகளுக்கு இடம் மா... மேலும் பார்க்க

IPL: "சஞ்சு சாம்சன் வெளியேறினால் ரியான் பராக்தான் அதற்குக் காரணம்" - முன்னாள் சிஎஸ்கே வீரர்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாகச் சமீப நாள்களாகப் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.இதைவிட முக்கியமாக, சஞ்சு சாம்சன் சிஎஸ்... மேலும் பார்க்க

"கவாஸ்கரும், டெண்டுல்கரும் அப்படி நினைத்திருந்தால்..." - உத்வேகம் தரும் சர்பராஸ் கான்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும், இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடிக்க நீண்ட காலமாகப் போராடிவரும் இளம் வீரர் சர்பராஸ் கான்.கடந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந... மேலும் பார்க்க