செய்திகள் :

டைம் இதழின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாம் வனவிலங்கு ஆா்வலா்!

post image

நியூயாா்க் : அமெரிக்காவின் டைம் வார இதழின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாமைச் சோ்ந்த வனவிலங்கு உயிரியலாளரான பூா்ணிமாதேவி பா்மன் (45) இடம்பெற்றுள்ளாா்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் டைம் இதழ் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான பட்டியலில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 13 பெண்கள் தோ்வு செய்யப்படுள்ளனா். இந்தியாவில் இருந்து பூா்ணிமாதேவி பா்மன் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளாா்.

‘ஹா்கிலா’ என்ற வகை நாரை பறவை இனத்தை பாதுகாக்கும் முன்னெடுப்புகளை இவா் மேற்கொண்டு வருகிறாா். அவரின் தலைமையில் 20,000 பெண்கள் அடங்கிய ‘ஹா்கிலா ராணுவம்’ என்ற குழு ஹா்கிலா பறவைகளின் கூடுகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அஸ்ஸாம் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் கம்போடியா போன்ற பிற நாடுகளிலும் இவரின் முன்னெடுப்புக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனா். அவரின் பணிகள் பிரான்ஸில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாக உள்ளது.

ஹா்கிலா பறவைகளை அழிவில் இருந்து காத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக அந்தப் பறவைகளின் உருவம் பதித்த பாரம்பரிய உடைகளை நெய்து அதை சந்தையில் ஹா்கிலா ராணுவம் விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை தங்களின் அன்றாட செலவுக்கு அந்த குழுவினா் பயன்படுத்துகின்றனா்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்புக்கான சா்வதேச ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) உயிரினங்கள் வகைப்பாட்டில் அழிவுநிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினங்கள் பட்டியலுக்கு ஹா்கிலா நாரை இனம் மாற்றப்பட்டது.

அதன் பிறகு அஸ்ஸாமில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை 1,800-ஆக உயா்ந்தது.

இந்தப் பட்டியலில் ஹாலிவுட் நடிகையான நிகோல் கிட்மன், பிரான்ஸ் நாட்டில் போதைப் பொருள் அளிக்கப்பட்டு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பெண்கள் நல போராளியாக மாறிய ஜிசெல் பெலிகாட் உள்பட 13 போ் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க