செய்திகள் :

ட்ரம்ப் சந்திப்பு: 'நீண்ட நாள்களுக்குப் பிறகு, நம்முடைய...' - ரஷ்யாவில் புதின்!

post image

அமெரிக்கா அலாஸ்காவில் பேச்சுவார்த்தை முடிந்த சில முடிந்த சில மணிநேரங்களிலேயே ரஷ்யா கிளம்பிவிட்டார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யாவில் புதின்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவில் பேசியிருக்கிறார் புதின்.

"நீண்ட காலமாக, நாம் இந்த மாதிரியான நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. ஆனால், இப்போது நமது நிலைப்பாட்டை அமைதியாகவும், விளக்கமாகவும் முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

இந்தப் பேச்சுவார்த்தை வெளிப்படையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தை தேவையான முடிவுகளை எடுப்பதற்கான வழிகளை வகுத்துள்ளது.

மேலும், இது தகுந்த நேரத்தில் நடந்தது மற்றும் பயனுள்ளதாகவும் இருந்தது" என்று ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

புதின் நிலைப்பாடு

2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, புதின் நேரடியாக பெரியளவில் உலக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இது அதற்கான ஆரம்பப்புள்ளி என்று நம்பப்படுகிறது.

மேலும், பேச்சுவார்த்தையில், தானும் உக்ரைன் உடனான போரை நிறுத்துவதில் விருப்பமாக உள்ளதாக புதின் தெரிவித்திருக்கிறார்.

மேடையில் காந்திமதி டு ராமதாஸ் - ராமதாஸ் தலைமையிலான சிறப்புப் பொதுக்குழு கூட்டம்|Photo Album

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்ராமதாஸ் | பாமக சிறப்பு பொ... மேலும் பார்க்க

Rahul Gandhi: "இனியும் தேர்தல்களை திருட விடமாட்டோம்" - வாக்காளர் அதிகார யாத்திரையில் சபதம்!

பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற... மேலும் பார்க்க

'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? - தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நா... மேலும் பார்க்க

CPI: புதிய மாநிலச் செயலாளர் தேர்வு? முத்தரசன் மாற்றப்படுவாரா? - பரபரக்கும் சேலம் மாநாடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாநிலச் செயலாளரை கட்சித் தலைமை தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இவ்விவகாரம் குறித்து... மேலும் பார்க்க

"மலிவான அரசியல் செய்கிறார்; ஆளுநர் இங்கேயே இருக்கட்டும்..!" - முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொ... மேலும் பார்க்க

RSS: ``இந்தியாவின் தாலிபன் போன்றது ஆர்.எஸ்.எஸ்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமரசனம்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழ... மேலும் பார்க்க