செய்திகள் :

'ட்ரம்ப் பார்ட்னர் நான்' - ட்ரம்பை கொல்ல இருமுறை ஈரான் முயற்சியா? - நெதன்யாகு குற்றச்சாட்டு என்ன?

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு நேர்காணல் ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஈரான் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நெதன்யாகு பேசியது என்ன?

"ட்ரம்பை ஈரான் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஈரான் இரண்டு முறை அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் அணு ஆயுதம் வைத்துகொள்ள வேண்டுமா மற்றும் உங்கள் நகரங்களுக்கு அனுப்ப வேண்டுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

ட்ரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். அவர் ஈரானுடன் மற்றவர்களைப் போல பலவீனமான பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஈரானின் போலி அணு ஆயுதத்தை ரத்து செய்தார். மேலும், ஈரானின் ஜெனரல் காசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டார்.

'நீங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கக் கூடாது. அதனால், யுரேனியத்தை உங்கள் நாட்டில் அதிகப்படுத்தக்கூடாது' என்று தெளிவாகவும் தெரிவித்துவிட்டார்.

அதனால் தான், ஈரானுக்கு ட்ரம்ப் நம்பர் ஒன் எதிரி. அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள்".

நெதன்யாகுவைக் கொல்ல முயற்சியா?

அதே நேர்காணலில், "என்னையும் ஈரான் கொல்ல முயற்சித்தது. அவர்களது ஏவுகணை என்னுடைய பெட்ரூமின் ஜன்னலைத் தாக்கியது. ஈரானை எதிர்கொள்வதில், ட்ரம்பிற்கு நான் 'ஜூனியர் பார்ட்னர்'. ஈரானின் அணு ஆயுத முயற்சிக்கு எதிராக நான், ட்ரம்ப் இருவருமே வலுவாக நிற்கிறோம்" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"2ஜி வழக்கில் எந்த சிபிஐ வழக்குப் பதிந்ததோ அதே சிபிஐ-யை தண்ணீர் குடிக்க வைத்தேன்" - ஆ.ராசா பேச்சு

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.ஆ.ராசா அப்போது, பேசிய அவர், "இந்த மேடையில் ஆச... மேலும் பார்க்க

Ukraine: "போர் நிறுத்த முயற்சிகளின் மீது எச்சில் துப்பிய ரஷ்யா" - ஜெலன்ஸ்கி ஆவேசம்

உக்ரைன் மீது கடந்த ஜூன் 15ம் தேதி ரஷ்யா நடத்திய தக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி. நாட்டின் மின்சாராக் கட்டமைப்புகள் மீதான புதின் ராணுவத்தின் தாக்குதலை, "அமைதியை ... மேலும் பார்க்க

'ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!' - ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை ... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் 18 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி; பீகாரில் 30 லட்சம்..!' - திடீர் சர்ச்சையின் பின்னணி

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்கள் பீகாரில் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் ரா... மேலும் பார்க்க