செய்திகள் :

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல்முறையாக சவரன் ரூ. 70,160-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை மே 8-இல் சவரன் ரூ. 73,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 920 குறைந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

இதற்கிடையே அமெரிக்கா - சீனா இடையே பரஸ்பர வரி விதிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தை சுமுகமான முடிவை எட்டியுள்ளதால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் பதிலாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியதால், சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தது.

இச்சூழல் இந்தியாவிலும் பிரதிபலிக்கும் பட்சத்தில், சென்னையில் தங்கம் விலை மே 12-இல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து ரூ. 70,000-க்கும், மே 13-இல் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ. 70,840-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து மே 14-ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,560 குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ. 195 குறைந்து ரூ. 8,610-க்கும், சவரனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று(மே 16) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க