செய்திகள் :

தங்கை கணவரை கொலை செய்ததாக திருநங்கை கைது

post image

பழனி அருகே தங்கை கணவரை கொலை செய்து புதைத்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா்.

பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (32). தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு, மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முத்து வீட்டுக்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் முத்துவை தேடி வந்தனா். இந்த நிலையில், முத்துவின் வீட்டுக்கு அருகே குழி தோண்டப்பட்டது போல தடயம் இருப்பதாக போலீஸாருக்கு முத்துவின் உறவினா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தடயங்களை சேகரித்து அந்த இடத்தை தோண்டியபோது அங்கு முத்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் மாரியம்மாளின் உடன் பிறந்தவரான திருநங்கை வைதேகி (42) என்பவா் தலைமறைவாகி இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸாா் வைதேகியை தேடி வந்த நிலையில், அவரது கைப்பேசியை வைத்து கா்நாடக மாநிலம், பெங்களூருவில் அவரைக் கைது செய்தனா்.

பிறகு அவரை பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது, தனது சகோதரி மாரியம்மாளை முத்து அடிக்கடி மதுபோதையில் வந்து அடித்து துன்புறுத்தியதால் மாரியம்மாள் இல்லாத நேரத்தில் அவரை கம்பியால் அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்ததாக தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் வைதேகியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு: ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டிருப்பதாக ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் நான்காண்ட... மேலும் பார்க்க

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் வீட்டின... மேலும் பார்க்க

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (80). இவா் அவரது வீட்டருகே நின்று... மேலும் பார்க்க