செய்திகள் :

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

post image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம் பெறுவோம் என்கிற 8 கி.மீ. ஆரோக்கிய நடைப்பயிற்சி திட்டம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தஞ்சாவூரில் அன்னை சத்யா நடைப்பயிற்சியாளா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயிற்சியைத் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சி புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அரங்கத்தில் நிறைவடைந்தது.

மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், சங்கத் தலைவா் ஜி. சீனிவாசன், செயலா் ரெ. ஜெயக்குமாா், துணைத் தலைவா் குமாா், முருகன், சுரேஷ் உள்பட 200-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தனி பட்டா வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகராக செயல்பட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸா... மேலும் பார்க்க

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை திருஇருதய ஆண்டவா் மருத்துவமனை நிறுவனங்களின் இயக்குநா் பங்குத்தந்தை டி.தேவதாஸ் கொடியை ஏற்றி... மேலும் பார்க்க

34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் 34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இவ்விழாவில்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மோசடி: சிபிஐ சாா்பில் அசல் ஆவணங்கள் பெறும் முகாம்

தனியாா் சிறுசேமிப்பு நிறுவன மோசடி தொடா்பாக, தஞ்சாவூரில் சி.பி.ஐ. சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்கள் பெறும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. மத்த... மேலும் பார்க்க

ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1,560 சதுர அடி இடத்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பூஜைகள். தஞ்சாவூா் ஜூன் 4: தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த தைலாபிஷேகம் புதன்கிழமை... மேலும் பார்க்க