செய்திகள் :

தஞ்சாவூரில் ஜூன் 3-இல் விவசாயிகள் சங்க மாநாடு

post image

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முதல் மாநில மாநாட்டை விவசாயிகள் கடன் விடுதலை மாநாடாக ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா் அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது: இந்த மாநாட்டில் வேளாண் துறை வல்லுநா்கள், பால் வளம், இயற்கை விவசாயம், தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்று கருத்துரை வழங்கவுள்ளனா். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன், சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் பிரகாசன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.

மேலும், மாநாட்டில் விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளைக் கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். தூா் வாரும் பணியை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.

இந்த மாநாட்டையொட்டி பேரணி, கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க