செய்திகள் :

தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

post image

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தோராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசுப் புதிய தேர் செய்து கொடுத்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதில், 15 ஆம் திருநாளான புதன்கிழமை காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை 5 மணியளவில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.

ஆபரேஷன் சிந்தூர்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

இதைத்தொடர்ந்து, காலை 6.15 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க. கண்ணன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. அதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் செல்கின்றன. தேருக்கு முன்னே சிவ வாத்தியங்கள் முழக்கமிட, பக்தா்கள் தியாகேசா என முழக்கங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்துச் செல்கின்றனா்.

மேலும், பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும்

மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், இரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன.

மேலும், தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து வழங்கி வருகின்றனர்.

இவ்விழாவையொட்டி, ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டுள்ளனர்.

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு!

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.மலப்புரம் மாவட்டம் வலஞ்சேரியை சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. ந... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா போன்று இந்திய அணிக்காக விளையாடியவர்கள் சிலரே: கபில் தேவ்

ரோஹித் சர்மாவைப் போன்று வெகு சிலரே இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு: சேலம் மாவட்டத்தில் 94.32% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சேலம் மாவட்டத்தில் 94.32 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி ந... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93.27% தோ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 107 பள்ளிகளைச் சோ்ந்த 93.27 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொது தேர்வை 107 அரசு, தனியாா் பள்ளிகளைச் சேர்ந்த 653... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53% தேர்ச்சி

திருநெல்வேலி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 813 மாணவர்க... மேலும் பார்க்க

ஆம்பூர் பகுதியில் திடீரென பலத்த வெடி சப்தம்

ஆம்பூர்: ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை திடீரென பலத்த வெடி சப்தம் கேட்டதால், கிராம மக்கள் அச்சமடைந்தனா்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளா... மேலும் பார்க்க