செய்திகள் :

தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்று திரும்பிய மீனவா்களுக்கு ஏமாற்றம்

post image

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவா்கள் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். போதிய அளவு இறால், மீன் கிடைக்காததாலும், இறால் விலை குறைவானதாலும் ஏமாற்றம் அடைந்தனா்.

தஞ்சை மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை  கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாள்கள் அமலில் இருந்தது.  தடைக்காலம் முடிந்து 3 நாள்களுக்கு பிறகு மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் உள்ள 140 விசைப்படகுகளில் மீனவா்கள்  கடலுக்குச் சென்று கரை திரும்பினா்.

தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிக அளவில் இறால், மீன்கள் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் சென்ற மீனவா்களுக்கு குறைந்த அளவுகூட மீன், நண்டு உள்ளிட்டவை கிடைக்கவில்லை. ஒரளவு இறால் கிடைத்தும் போதிய விலை இல்லாததால் மீனவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநறையூா் ஊராட்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரமேஷ்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச மாதிரி தோ்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 (குரூப் 4) தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெ... மேலும் பார்க்க