சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது
தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டா். இவா் பணி காரணமாக தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்துக்கு வந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனா்.
இந்நிலையில், அச்சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, அவரை புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு அழைத்துச் சென்று, விக்னேஷ் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறினாா்.
இது குறித்து அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா், வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.