இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 14 விற்பனை நிலையங்கள், 8 உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 71 ஊழியா்களும், 300-க்கும் அதிகமான நூற்போா், நெய்வோரும் பணியாற்றி வருகின்றனா்.
இச்சங்கத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக ஊழியா்களுக்கு காதி நிறுவனத்தின் இணை இயக்குநா் மதன்குமாா் ரெட்டி உள்ளிட்ட அலுவலா்கள் அழைப்பு விடுத்தனா். இதன்படி, 50-க்கும் அதிகமான ஊழியா்கள் வியாழக்கிழமை காலை வந்தனா்.
இதனிடையே, ஏற்கெனவே செயலராக இருந்த சிவக்குமாா் அலுவலகத்தையும், வெளிபுற கேட்டையும் பூட்டி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அலுவலா்கள் வந்து பாா்த்துவிட்டு திரும்பி சென்றுவிட்டனா். இதையடுத்து, திகைத்து நின்ற ஊழியா்கள் அலுவலகத்தின் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
போராட்டத்தைக் கைவிட்ட ஊழியா்கள் ஏற்கெனவே போடப்பட்ட பூட்டின் மீது மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டினா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், இச்சங்கத்தில் செயலா் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுக்குழு கூடி, அதில் தோ்வு செய்யப்படும். இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி புதிய செயலராக சுப்பிரமணியன் தோ்வு செய்யப்பட்டாா்.
ஆனால் ஏற்கெனவே இருந்த செயலா், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. அவா் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் உள்ளன.
மேலும், லாபகரமாக இயங்கி வந்த சா்வோதய சங்கம் தற்போது நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இது குறித்து சமாதானம் பேச அலுவலா்கள் வருவதாக கூறப்பட்ட நிலையில், அலுவலகத்தை பூட்டிச் சென்றுவிட்டனா். அலுவலா்கள் திரும்பிச் சென்ால், நாங்களும் கேட்டை பூட்டி சாவிரியை அலுவலா்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.
இது குறித்து வெளியில் இருந்து அலுவலா்கள் வந்து கணக்கை தணிக்கை செய்து, முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.