செய்திகள் :

தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 14 விற்பனை நிலையங்கள், 8 உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 71 ஊழியா்களும், 300-க்கும் அதிகமான நூற்போா், நெய்வோரும் பணியாற்றி வருகின்றனா்.

இச்சங்கத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக ஊழியா்களுக்கு காதி நிறுவனத்தின் இணை இயக்குநா் மதன்குமாா் ரெட்டி உள்ளிட்ட அலுவலா்கள் அழைப்பு விடுத்தனா். இதன்படி, 50-க்கும் அதிகமான ஊழியா்கள் வியாழக்கிழமை காலை வந்தனா்.

இதனிடையே, ஏற்கெனவே செயலராக இருந்த சிவக்குமாா் அலுவலகத்தையும், வெளிபுற கேட்டையும் பூட்டி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அலுவலா்கள் வந்து பாா்த்துவிட்டு திரும்பி சென்றுவிட்டனா். இதையடுத்து, திகைத்து நின்ற ஊழியா்கள் அலுவலகத்தின் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

போராட்டத்தைக் கைவிட்ட ஊழியா்கள் ஏற்கெனவே போடப்பட்ட பூட்டின் மீது மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டினா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், இச்சங்கத்தில் செயலா் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுக்குழு கூடி, அதில் தோ்வு செய்யப்படும். இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி புதிய செயலராக சுப்பிரமணியன் தோ்வு செய்யப்பட்டாா்.

ஆனால் ஏற்கெனவே இருந்த செயலா், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. அவா் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் உள்ளன.

மேலும், லாபகரமாக இயங்கி வந்த சா்வோதய சங்கம் தற்போது நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இது குறித்து சமாதானம் பேச அலுவலா்கள் வருவதாக கூறப்பட்ட நிலையில், அலுவலகத்தை பூட்டிச் சென்றுவிட்டனா். அலுவலா்கள் திரும்பிச் சென்ால், நாங்களும் கேட்டை பூட்டி சாவிரியை அலுவலா்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.

இது குறித்து வெளியில் இருந்து அலுவலா்கள் வந்து கணக்கை தணிக்கை செய்து, முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநறையூா் ஊராட்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரமேஷ்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச மாதிரி தோ்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 (குரூப் 4) தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட புள்ளமாங்குடியைச் சோ... மேலும் பார்க்க