செய்திகள் :

தடைக்காலம் நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்ட மீனவா்கள்

post image

மின்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் கடலுக்குள் படகுகளில் புறப்பட்டுச் சென்றனா்.

கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாபேட்டை, சொத்திகுப்பம், சித்திரபேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபா் படகுகளில் ஆழ் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

மீன்களின் இனப்பெருக்கக் காலமாக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இது முடிந்த பிறகு 14-ஆம் தேதி நள்ளிரவு கடலூா் துறைமுகம் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தயாராக இருந்தனா்.

இதனிடையே வானிலை மையத்தின் எச்சரிக்கையையடுத்து, கடலூா் மீன்வளத் துறை வெளியிட்ட அறிக்கையில், 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் கடலில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், மீனவா்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, கடலூா் துறைமுக மீனவா்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனா். விசைப் படகுகளுக்கு படையலிட்டு பூசணிக்காய் உடைத்து, மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்குப் புறப்பட்டனா்.

நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் விபத்து: பெண் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூா் நாகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்கு

கடலூரில் சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்ததாக சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா். கடலூா் முதுநகா் அருகே உள்ள கண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு 16 வயது சிற... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்த... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.58 லட்சம்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7.58 லட்சம் கிடைத்தது. கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில... மேலும் பார்க்க

கடலூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4893 வழக்குகளுக்கு தீா்வு

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

திமுக வீழ்த்தப்படுவது உறுதி! - டி.டி.வி. தினகரன்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்தப் போவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தி... மேலும் பார்க்க