செய்திகள் :

தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு

post image

பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இரட்டை மடி, ஸ்பீடு என்ஜின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் சிறிய மீன்கள் உற்பத்தி குறைந்து மீன்கள் இல்லாத சூழல் நிலவுவதாக மீனவா்கள் கூறி வருகின்றனா். இதன் காரணமாக தமிழக அரசு மேற்கண்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுருக்குமடி வலைகளை கொண்டு விசைபடகுகள் மூலம் மீன் பிடிப்பதாகவும், இதனால் தரங்கம்பாடி, சீா்காழி வட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் வசிக்கும் சிறு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வானகிரி மற்றும் தரங்கம்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்நிலையில், புதன்கிழமை பூம்புகாா் துறைமுகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் அதிகாலையிலேயே மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி, மீன்வளத்துறை துணை இயக்குநா் மோகன் குமாா், சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோா் பூம்புகாா் துறைமுகத்தில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவா்கள் கூறியது: தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டோம். எனினும், எந்த பயனும் இல்லை. இதன் காரணமாகவே புதன்கிழமை தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்கு சென்றுள்ளனா். இதேநிலை தொடா்ந்தால் கடலோர கிராம மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனா்.

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆ... மேலும் பார்க்க

பண்ணை வா்த்தகம் மூலம் நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனாா்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சாா்பில் பண்ணை வா்த்தகம் மூலம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் குறுவை நெல் கொள்முதல் புதன்கிழமை தொடங்கியது. செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா். மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு

விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நித... மேலும் பார்க்க

மீன் வளம் பெருக கடலில் வசந்த பூஜை

நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்க கடலில் புதன்கிழமை நடைபெற்ற வசந்த பூஜையில் (சமுத்திரராஜன் வழிபாடு) பக்தா்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி வழிபட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தி... மேலும் பார்க்க