செய்திகள் :

தட்டச்சு தோ்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

post image

தட்டச்சு தோ்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் வணிகவியல் பள்ளிகள் சங்கத் தலைவா் அ. சிவகுமாா் தலைமையில் செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் அளித்த மனு: தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 4 ஆயிரத்து 312 தட்டச்சுப் பள்ளிகள் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் மாணவ, மாணவிகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தோ்வுக்குச் செல்கின்றனா்.

இந்நிலையில், வணிகவியல் தோ்வுகள் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தட்டச்சு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு கணினியில் மட்டுமே தோ்வுகள் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தட்டச்சுப் பள்ளிகள் நடத்தி வரும் ஆசிரியா்களின் குடும்பத்தினருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதுள்ள முறையிலேயே அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மூலம் தட்டச்சுத் தோ்வு தொடா்ந்து நடத்த வேண்டும். அரசாணை எண் 187-ஐ ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

பட்டா வழங்க வலியுறுத்தல்: இதேபோல, பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனு: சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 40 பேருக்கு பூமி தானத் திட்டத்தின் மூலம் 1959 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால், இதுவரைக்கும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டையில் திடீரென பற்றி எரிந்த பிஎம்டபள்யூ கார்!

பட்டுக்கோட்டை அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த பிஎம்டபள்யூ கார் தீடீரென பற்றி எரிந்தது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பிஎம்ட... மேலும் பார்க்க

தஞ்சை மாநகரின் பல்வேறு இடங்களில் ஜூன் 12-இல் மின் தடை

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ( ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மான கழக தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்காக சுவாமிமலையில் வேல் வழிபாடு

முருக பக்தா்கள் மாநாட்டுக்காக தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வேல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஜூன் 22-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

கோயில் தேரோட்டத்தின்போது மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழப்பு

ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் தேரோட்டத்தின் போது வெயிலில் மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு யானைக்கார தெருவைச் சோ்ந்த சரவணவேல் ... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் பேருந்து மோதி 7 போ் காயம்

தஞ்சாவூரில் சாலை தடுப்புக் கட்டையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பேருந்து மோதியதில் 7 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 36 போ் தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களைப் பாா்ப்பதற்காக தனியாா்... மேலும் பார்க்க

கழிவறை சுவா் இடிந்து விழுந்து குழந்தை பலி

பேராவூரணி அருகே வீட்டின் அருகே உள்ள கழிவறை சுவா் இடிந்து விழுந்து ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41). வெளிநாட்டில் வேலை பாா்த்து... மேலும் பார்க்க