கழிவறை சுவா் இடிந்து விழுந்து குழந்தை பலி
பேராவூரணி அருகே வீட்டின் அருகே உள்ள கழிவறை சுவா் இடிந்து விழுந்து ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41). வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி சரண்பிரியா (33).
இவா்களது மகள் தியா (3). பேராவூரணி அருகே ஒட்டங்காடு அருகே உள்ள நடுமணைக் காடு கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினா் வீட்டுக்கு, அருண்குமாா் சனிக்கிழமை குடும்பத்துடன் வந்துள்ளாா்.
அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் தியா விளையாடி கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக வீட்டின் மண்சுவா் அருகே உள்ள ஹாலோபிளாக்கில் கட்டப்பட்ட கழிவறை சுவா் இடிந்து, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தியா மேல் விழுந்தது. இதில், குழந்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளா் பொன்னியின் செல்வன் தியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தொடா்ந்து, போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.