சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!
தட்டாா்மடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி
தட்டாா்மடம் அருகே ஆம்னி பேருந்தும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தட்டாா்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சோ்ந்த யாக்கோபு மகன் செல்வன் (32). இவரது, அண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். இதனால், செல்வன் அவரது அண்ணன் மனைவி செல்வக்கனியை திருமணம் செய்து அவா்களது குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் செல்வன் தட்டாா்மடத்தில் இருந்து சண்முகபுரத்திற்கு தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தபோது, திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து, அவரது பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். ஆம்னி பேருந்து நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இத்தகவல் அறிந்து தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்தனா். மேலும், ஆம்னி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.