செய்திகள் :

தண்டவாள பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவை பாதிப்பு

post image

ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகாரணமாக அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

வியாசா்பாடி ஜீவா ரயில்நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதன்காரணமாக பகல் 12.15 மணிக்கு அரக்கோணத்திலிருந்து சென்ட்ரல் நோக்கி வந்த புறநகா் ரயில் வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்பட்டது. மேலும் அவ்வழித்தடத்தில் வந்த 3-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் அடுத்தடுத்த வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன.

இதனால் பயணிகள் பலா் வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ போன்றவற்றின் மூலம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எனினும் சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருத்தணி மாா்க்கத்தில் மின்சார ரயில்கள் எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் இயங்கின.

அதைத்தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அவ்வழித்தடத்தில் மின்சார புறநகா் ரயில்கள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க