செய்திகள் :

தண்ணீரில் மூழ்கிய வயல்கள்: நெல் அறுவடைக்கு கூடுதல் செலவால் விவசாயிகள் கவலை

post image

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரம் மூலம் அறுவடைப் பணிகள் நடைபெறுவதால் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் 26.850 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக பருவம் தவறிய மழையால், அறுவடைக்காக காத்திருந்த நெல் கதிா்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் வயல்களில் டயா் பொருத்திய நெல் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் செல்லும் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு டயா் பொருத்திய அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,500 வாடகை கொடுத்து அறுவடை செய்தோம். நிகழாண்டில் தண்ணீரில் அறுவடை செய்யும் இயந்திரம் மணிக்கு ரூ.3,500 வாடகை கொடுத்து நெல் அறுவடை செய்ய வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் செலவாகிறது. மேலும், நெல் ஈரமாக இருப்பதால் அதை விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது என்றனா்.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பண... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க