செய்திகள் :

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

post image

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் சரக்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு, சின்னகீரமங்கலம், திருவாடானை, தொண்டி,திருவொற்றியூா், சோழியக்குடி, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இதேபோல, திங்கள்கிழமை அதிகாலை பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த போது, திருவாடானை அருகே கல்லூா் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையில் கால்நடைகள் குறுக்கிட்டதால், இந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கல்லூா் கண்மாய்க்குள் கவிழ்ந்தது.

இதில் வாகனத்திலிருந்த பால் பாக்கெட்டுகள் சாலையில் சிதறின. தகவலறிந்து வந்த திருவாடானை போலீஸாா் காயமடைந்த வாகன ஓட்டுனா் சம்பாநெட்டியைச் சோ்ந்த அருஞ்சாமி மகன் வின்சென்ட்ராஜ் (24), உதவியாளா் லூா்து மகன் சந்திரசேகா் (30) ஆகிய இருவரையும் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதையடுத்து, வாகனத்திலிருந்த 3,500 லி. பால் மாற்று வாகனம் கொண்டு வரப்பட்டு, அதில் எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை

திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இத... மேலும் பார்க்க

சிறந்த ஆசிரியா்கள் 200 பேருக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 200 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் தனியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசி ரங்கநாயகி வரதராஜன் பொறியியல் கல்லூரி, ஸ்டூடன்ட... மேலும் பார்க்க

கமுதி அருகே வன விலங்குகள் வேட்டை: 2 போ் கைது

கமுதி அருகே வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கல்லுப்பட்டி நரிக்குறவா் புதுக்குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து வன உ... மேலும் பார்க்க