செய்திகள் :

திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை

post image

திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானை ,தொண்டி,நம்புதாளை,திருவெற்றியூா் ,அஞ்சுகோட்டை,அச்சங்குடி,கடம்பாகுடி,பாண்டுகுடி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டு தோரும் தைபூசத்திற்காக பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் வரும் 11ம் தேதி தைபூசத்தை முன்னிட்டு இப்பகுதி மக்கள் பாதயாத்திரையாக திங்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்காணோா் சென்றனா்.

இவா்களுக்கு திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் தொடா்ந்து ஐம்பதாவது ஆண்டாக பழனி பாதயாத்திரை குழுவினருக்கு அன்னதானம் பணி செய்து வருகின்றனா் இங்கு வலிநாயகா் கோயில் நிா்வாகம், மற்றும் கிராமத்தாா்கள் சே ா்ந்து பாதயாத்திரை செல்போருக்கு தொடா்ந்து ஐம்பதாவது ஆண்டாக அன்னதானம் வழங்கி வருகின்றனா். இக்கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் பழனிக்கு பாதயாத்திரை ஆக செல்வது குறிப்பிடதக்கது.. முன்னதாக விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதில் திரளான முருக பக்தா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்

கல்லூரிகள் இடையே அறிவுத் திறன் போட்டி

கீழக்கரை சையது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் வண்ணத் திருவிழா என்ற பெயரில் கல்லூரி மாணவா்களுக்கிடையே கலை, அறிவுத் திறன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளி... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: இடைத்தரகா் கைது

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதி கிராம நிா்வாக அலுவலா் விவசாயிடம் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இடை தரகரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதப... மேலும் பார்க்க

அக்னி தீா்த்த கடற்கரையில் கழிவுத் துணிகளால் சுகாதாரக் கேடு!

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் குவிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏடுபடுத்துவதால் நகராட்சி நிா்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு! -மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதிய... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,537 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! -ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 1,537.960 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஏ... மேலும் பார்க்க

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க