செய்திகள் :

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

post image

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது.

முதல்வர் பதவிக்கான போட்டியில் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கைலாஷ் கெலாட், கபிஸ் மிஸ்ரா உள்பட நால்வரின் பெயர்கள் உள்ளன. தில்லியின் புதிய முதல்வர் தேர்வு குறித்து பாஜகவில் உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தில்லியில் ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகமான பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

ஊழலை ஒருபோதும் பாஜக பொறுத்துக்கொள்ளாது. ஊழலில் ஈடுபட்டவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியுள்ளார். அவரின் வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுகிறோம்.

தில்லியில் முதல்வர் பொறுப்பேற்றதும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.

தில்லி மேம்பாட்டிற்காக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். தவறான வழியில் செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தைக் கூட மக்கள் கொடுக்கவில்லை. தில்லி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தில்லி முதல்வர் யார் என்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டதைப்போன்று, தலைமை அறிவிக்கும் முதல்வர் யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுவோம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | 2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

மணிப்பூர் இனக் கலவரத்திற்கு மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்! - கனிமொழி

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

பிரேன் சிங் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா!

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.மூன்று நாள் பயணமாகக் கேரளம் வந்துள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸின் மு... மேலும் பார்க்க

மெட்டா நிறுவனத்தில் 3,000 பேர் பணி நீக்கம்!

பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.நாளை முதல், பணி நீக்க நடவடிக்கை தொட... மேலும் பார்க்க

மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல.. பிரதமர் மோடி

புது தில்லி: பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும் பார்க்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி வலியுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அரசிடம் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ... மேலும் பார்க்க

அமேதி: மதுபோதையில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

அமேதியில் மதுபோதையில் 80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராம ஒன்றில் மதுபோதையில் இளைஞர் ஒருவ... மேலும் பார்க்க