செய்திகள் :

மெட்டா நிறுவனத்தில் 3,000 பேர் பணி நீக்கம்!

post image

பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.

நாளை முதல், பணி நீக்க நடவடிக்கை தொடங்குவதாகவும், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, நிறுவனத்துக்குள் அவர்களது ஆக்ஸஸ் அட்டை செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணை கிடைக்கப்பெற்ற ஒரு சில மணி நேரங்களில் அவர்களுக்கு நிறுவனத்துக்குள் ஆக்ஸஸ் அட்டை செயலிழந்து போகும் என்றும், மெட்டா நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பணி நீக்க நடவடிக்கையானது பிப்ரவரி 11 முதல் 18 வரை நடைபெறும் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தற்போதைக்கு நிறுவனத்துக்குள் வேறு பணிகளுக்கு இடமாற்றம் கோர முடியாது என்றும், அவர்களது பணி நீக்க இறுதி தேதிக்குப் பிறகு, இதே நிறுவனத்தில் வேறு ஏதேனும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வரிச் சலுகைகள்: மக்களவையில் காரசார விவாதம்

புது தில்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் குறுகிய கால நடவடிக்கை என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இது பொருளாதார வளா்ச்சிக்கான ந... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பிறந்த 12 குழந்தைகள்!

மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன. இக்குழந்தைகளுக்கு கும்ப், கங்கை, ஜமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளாவுக்குத் தொடா்புடைய பெயா்கள் சூட்டப... மேலும் பார்க்க

அமெரிக்க அரசிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை: மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை!

அமெரிக்க அரசு நிதியுதவி பெற்று இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வை... மேலும் பார்க்க

‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வேண்டாம்: சிவசேனை கட்சி அழைப்பு

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது என்று சிவசேன... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா் குடியரசுத் தலைவா்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா். இந்தி... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் குடிகொண்டுள்ளது. புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 37 வயது ... மேலும் பார்க்க