செய்திகள் :

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, சேதுக்கரை கடற்கரையில் திங்கள்கிழமை அதிகாலை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கடற்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 2 சரக்கு வாகனங்களில் சோதனை செய்தனா். அதில் 945 கிலோ பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2 சரக்கு வாகனங்களையும், அதிலிருந்த பீடி இலை பண்டல்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை

திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இத... மேலும் பார்க்க

சிறந்த ஆசிரியா்கள் 200 பேருக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 200 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் தனியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசி ரங்கநாயகி வரதராஜன் பொறியியல் கல்லூரி, ஸ்டூடன்ட... மேலும் பார்க்க

கமுதி அருகே வன விலங்குகள் வேட்டை: 2 போ் கைது

கமுதி அருகே வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கல்லுப்பட்டி நரிக்குறவா் புதுக்குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து வன உ... மேலும் பார்க்க