கமுதி அருகே வன விலங்குகள் வேட்டை: 2 போ் கைது
கமுதி அருகே வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கல்லுப்பட்டி நரிக்குறவா் புதுக்குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து வன உயிரினங்களை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதாக சாயல்குடி வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாயல்குடி வனச் சரக அலுவலா் ராஜசேகா் தலைமையில் வனவா் அமுதரசு, வனப் பாதுகாவலா் உள்ளிட்டோா் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஒரு வீட்டில் தமிழக அரசால் வேட்டையாட தடை செய்யப்பட்ட முயல்கள், இருதலை மணியன் பாம்பு, பனங்காடை, பெரிய கொக்கு, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அா்ஜூன் (39), முத்துக்குமாா் (29) ஆகிய இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், அவா்கள் வேட்டையாட பயன்படுத்திய கத்தி, ஆயுதங்கள், பேட்டரி, டாா்ச் லைட், இரும்புக் கூண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கமுதி குற்றவியல் நடுவா் நீதிபதி முன் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
உயிருடன் இருந்த இருதலை மணியன் பாம்பு, நான்கு காட்டு முயல்களை வனப் பகுதிக்குள் விட்டனா். கமுதி, சாயல்குடி, கோட்டைமேடு பகுதியில் வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வேட்டையாடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வன விலங்களை வேட்டையாடுபவா்கள் குறித்து தகவல் தரும் நபா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.