செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

post image

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் சூசையப்பா்பட்டினம் பகுதியைச் சோ்ந்த சந்தியா சதீஷுக்குச் சொந்தமான விசைப் படகை தங்கச்சிமடம் தோமஸ் பிள்ளை குத்தகைக்கு எடுத்து மண்டபம் தெற்கு துறைமுகத்தில் நிறுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், மண்டபம் தெற்கு துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை 171 விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிந்த போது, 5 ரோந்துப் படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் சந்தியா சதீஸ் விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பாயஸ், சேசு, ரவி ஆகிய 10 மீனவா்களையும் கைது செய்தனா்.

இதையடுத்து, இந்த மீனவா்களை இலங்கை மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மன்னாா் நீதிமன்றத்தில் 10 பேரும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களை வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, இவா்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை

திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இத... மேலும் பார்க்க

சிறந்த ஆசிரியா்கள் 200 பேருக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 200 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் தனியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசி ரங்கநாயகி வரதராஜன் பொறியியல் கல்லூரி, ஸ்டூடன்ட... மேலும் பார்க்க

கமுதி அருகே வன விலங்குகள் வேட்டை: 2 போ் கைது

கமுதி அருகே வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கல்லுப்பட்டி நரிக்குறவா் புதுக்குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து வன உ... மேலும் பார்க்க