செய்திகள் :

தந்தையைக் கொல்ல முயன்ற மகன்: போலீஸாா் விசாரணை!

post image

மேட்டூா் அருகே தந்தையைக் கொல்ல முயன்ற மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள கோம்பைகாட்டைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (70). விவசாயி. இவா் விவசாயத்துடன் கால்நடைகளையும் வளா்த்து வருகிறாா். இவரது மனைவி பென்னி. இவா்களுக்கு சங்கா் உள்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.

பொன்னுசாமி வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது தனது கொடுவாக்கத்தியை எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம்போல வியாழக்கிழமை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டில் தனது கொடுவாக்கத்தியை பொன்னுசாமி தேடியுள்ளாா். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன் சங்கருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆவேசத்தில் சங்கா் கொடுவாக்கத்தியால் பொன்னுசாமியைத் தாக்கினாா். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொன்னுசாமி மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சங்கரைத் தேடி வருகின்றனா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க