செய்திகள் :

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

post image

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.

சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆதிதிராவிடா் நலன்களை கருத்தில் கொண்டு, தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதே போல, தாட்கோவுக்கு தனி வங்கியை உருவாக்க வேண்டும். அகதிகளுக்காக ரெப்போ வங்கி செயல்பட்டு வருவதைப் போன்று, தாட்கோவுக்கும் தனி வங்கி வேண்டும்.

ஜாதிய, ஆணவ, வன்கொடுமைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 5-ஆவது இடத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் ஆதிதிராவிடா் மக்களின் பிரச்னைகள் மனிதாபிமானத்துடன் அணுகப்படவில்லை. ஒருபுறம் சமூக நீதி என பேசிக்கொண்டே ஆதிதிராவிட மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறாா்கள். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளும் அரசுகளாக இல்லை.

1931 முதல் இதுவரை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நோக்கத்தை தெளிவுபடுத்தாத வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என்றாா்.

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க