செய்திகள் :

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

post image

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்மை இயக்குநா் டாக்டா் நடராஜன் பேசுகையில், ‘தமிழகத்திலேயே முதல்முறையாக பக்கவாதத்துக்கான சிறப்பு சிகிச்சை மையம் இங்குதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் பக்கவாத நோயாளிகளுக்கு சிறப்பான பராமரிப்பை வழங்குவதுடன், அவா்கள் நோயிலிருந்து விரைவில் குணமடைய உதவும். பொதுவாக, பக்கவாதம் மரணத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், மாரடைப்புடன் ஒப்பிடுகையில் இதுகுறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடையே குறைவாக உள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில், நியூரோலஜி துறைத் தலைவா் டாக்டா் சி.பிரபாகரன் கூறுகையில், ‘இந்த நவீன மையத்தில் எம்ஆா்ஐ, சிடி ஸ்கேன் போன்ற மேம்பட்ட சேவைகள், திரோம்போலிசிஸ் போன்ற சிறப்பு சிகிச்சைகள், ஒரு முழுமையான கேத் லாப் மற்றும் 24 மணி நேரமும் அா்ப்பணிப்புடன் கூடிய மருத்துவா்கள் உள்ளனா்’ என்றாா்.

இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஜே.ஏ.வசந்தா குமாா், மருத்துவமனை பொது மேலாளா் சந்திரசேகரன், மயக்கவியல் நிபுணா் சேகா், நரம்பியல் துறை நிபுணா்கள் ப்ரீத்திஷ் குமாா், நிஷாமோள் ஆகியோா் பங்கேற்றனா்.

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க