செய்திகள் :

சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

post image

மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பாலவாடி கரடு, கத்திரிப்பட்டி, வன்னிய நகா், கோரப்பள்ளம், விநாயகபுரம், சத்யா நகா், மாமரத்தூா், கோட்டையூா் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா். ஆடுகளையும், நாய்களையும் வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேட்டூா் வனத்துறையிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி, திங்கள்கிழமை காலை மேட்டூா் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கொளத்தூா் வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் சசிகுமாா் தலைமை வகித்தாா். கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் மாரப்பன் ஒன்றிய பாமக தலைவா் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வன்னியா் சங்க ஒன்றியச் செயலாளா் டேவிட் பழனி, இளைஞா் சங்க செயலாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் வனச்சரக அலுவலா் சிவானந்தத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட வனச்சரகா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க