செய்திகள் :

தனம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

post image

நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சத்யா ‘தனம்’ என்ற புதிய தொடரில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

நடிகர் ஸ்ரீகுமார் அகல்யா, மலர்கள், மேகலா, வானத்தைப்போல, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.

இதையும் படிக்க: கூலி படப்பிடிப்பு அப்டேட்!

இதுவரை 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும்கூட.

தனம் தொடரில், ஸ்ரீகுமார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார், அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

இந்த நிலையில், ‘தனம்’ தொடர் விஜய் தொலைக்காட்சியில் வரும் பிப். 17 ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 11) சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை அதிரடி உயர்வுஅமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியே... மேலும் பார்க்க

தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!

தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும்... மேலும் பார்க்க

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்!

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று(பிப். 11) காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.ஜீவ காருண்யத்தை உலகு... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று(பிப். 11) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி பழன... மேலும் பார்க்க

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க