செய்திகள் :

தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி: இபிஎஸ் புகழஞ்சலி!

post image

தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி.

எம்ஜிஆருடன் சரோஜா தேவி இணைந்து நடித்த திரைப் படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.

இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா பதிலளிக்க உத்தரவு!

ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Edappadi Palaniswami has paid tribute, stating that Saroja Devi captivated fans with her unique acting talent.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பார்க்க

தமிழகத்தில் 33 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆர். சிவபிரசாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிந்து தாயும் மகளும் பலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர... மேலும் பார்க்க

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு சாகும்வரை சிறை! பெண்ணுக்கு ரூ.1 கோடி நிவாரணம்!!

ஓடும் ரயிலில், காட்பாடி அருகே கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம்... மேலும் பார்க்க

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் இருந்தது தொடர்பாக, 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி காரியாங்குடியில் அரசு த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கார... மேலும் பார்க்க