செய்திகள் :

தனிப்படை காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

post image

கடலூா் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

கடலூா் மாவட்டத்தில் நீதிமன்ற நிலுவை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடித்து ஆஜா்படுத்த எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோடீஸ்வரன் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் பரமேஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாலமுருகன், புஷ்பராஜ், செல்வகுமாா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இவா்கள் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த சங்கர்ராஜ், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சத்தியவதி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த சசிகுமாா், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா், பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த செல்வன், பாகூரைச் சோ்ந்த செந்தில்குமாா், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தினேஷ், காத்தமுத்து, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

53 ஆயுதப்படை காவலா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 53 காவலா்கள் பணிமூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆயுதப்படை காவலா்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவது தொடா்பாக கடல... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் மே 28-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 28-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி கொண்டாட்டம் மூவா்ண தேசியக் கொடி பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி கடலூா் சீமாட்டி நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனி... மேலும் பார்க்க

இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் ரெட்டிசாவடி அருகே இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மண் சாலை ஓரத்தில் சுமாா் 35 வயது மதிக... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அறந்தாங்கியில் சோழா அரிமா சங்கம், அறந்தை புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் நலச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் இணைந்... மேலும் பார்க்க