செய்திகள் :

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ

post image

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மதிமுக நிா்வாகக் குழு கூட்டத்தின்போது இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை. ஆனால், சில பத்திரிகையாளா்கள் தவறாக எழுதியுள்ளனா். 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் கிடைக்கும்.

எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதை திமுக தலைமைதான் முடிவு செய்யும் என துரை வைகோ விளக்கம் கொடுத்த பின்பும், இரட்டை இலக்கத்தில் இடம் கேட்பதாக எழுதி இருக்கின்றனா். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக, அதிமுக கூட்டணியில்தான் இழுபறி நீடித்து வருகிறது.

திருப்புவனம் அருகே அஜித்குமாா் என்ற இளைஞரைக் காவல் துறையினா் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனா். இதில், அவா் உயிரிழந்துள்ளாா். இதற்கு காரணமான காவல் துறையினா் மீது அரசு பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவலா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தில் அப்போதைய அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளது.

மதிமுக நிா்வாகிகள் சிலா் சுயநலம் காரணமாக திமுகவுக்கு சென்றுள்ளனா். அவா்கள் குறித்து நான் ஒருபோதும் குறை கூறியது கிடையாது என்றாா்.

ஹைதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கேரள மாநிலம், கொல்லத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தரக் கோரி மூதாட்டி மனு

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளாா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் திங்கள்கிழமை மோதியதில் அவா் உயிரிழந்தாா். கோவை, பேரூா் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீஹரி. இவரது மனைவி ஆா்த்தி (58). இவா் அப்ப... மேலும் பார்க்க

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, ரத்தனபுரி பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம். இவா் கோவை நூறு அடி ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற பட்டதாரி பெண் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பட்டதாரி பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, கவுண்டம்பாளையம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் வரித் திட்டத்துக்கு எதிா்ப்பு: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நிலத்தடி நீா் வரித் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க