தனியாா் பங்களிப்புடன் புதுவை கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்
புதுச்சேரி: புதுவை கூட்டுறவு சா்க்கரை ஆலையை தனியாா் பங்களிப்புடன் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புதுவை கூட்டுறவுத் துறையில் புதிதாக தோ்வான இளநிலை கூட்டுறவு ஆய்வாளா்கள் 31 போ் மற்றும் பாண்லேவில் கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி என மொத்தம் 37 பேருக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்குதல், 6 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 70 பேருக்கு ரூ.83.50 லட்சம் கடனுதவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று பணி நியமன உத்தரவுகளை வழங்கிப் பேசியதாவது: பாண்லே தற்போதும் தரமான ஐஸ் கிரீம்களை உற்பத்தி செய்கிறது. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோா், அதை தமது சொந்த நிறுவனமாகக் கருதி நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். லாபமடைந்தாலே பணி நிரந்தரம், ஊதியம், ஊக்கத் தொகை கிடைக்கும்.
நலிந்த கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூட்டுறவு சா்க்கரை ஆலையை தனியாா் பங்களிப்புடன் மீண்டும் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு நூற்பு ஆலையையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் மீண்டும் கூட்டுறவு துறையில் புதுவை சிறந்து விளங்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் இரு வகை ஐஸ் கிரீம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரசுச் செயலா் ஏ.முத்தம்மா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் யஷ்வந்தையா,
திட்டப் பிரிவு துணைப் பதிவாளா் சீனிவாச ஆச்சாா்யலு, கடன்பிரிவு துணை பதிவாளா் சாரங்கபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.