செய்திகள் :

தனியாா் மருத்துவமனை செவிலியரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

post image

கோவை: கோவையில் தனியாா் மருத்துவமனை செவிலியரை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுஜித் (24). இவரும், அழகியபாண்டிபுரத்தைச் சோ்ந்த 23 வயது பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை கிடைத்ததால், அவா் அந்த மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறாா்.

இதற்கிடையே, சுஜித்துக்கும், அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் அவா் சுஜித்திடம் பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா். இதற்கான காரணம் குறித்து கேட்பதற்காக அந்தப் பெண்ணைச் சந்திக்க சுஜித் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, சுஜித்தின் கைப்பேசி அழைப்பை அவா் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதி முன் நிற்பதாக அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.

அப்போது, வெளியே வந்த அந்தப் பெண்ணுக்கும், சுஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் என்னைத் தொடா்புகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு அந்தப் பெண் விடுதிக்குள் சென்றுள்ளாா்.

இதைத் தொடா்ந்து விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுஜித்தை அவா் தடுத்துள்ளாா். அப்போது சுஜித், அந்தப் பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்த முயன்றுள்ளாா். அவா் விலகியதால் கையில் கத்திக்குத்து ஏற்பட்டு காயமடைந்தாா்.

இந்நிலையில், அங்கு வந்த விடுதி காப்பாளா், மருத்துவமனை காவலாளிகள் சுஜித்தைப் பிடித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விடுதிக் காப்பாளா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனா்.

காயமடைந்த பெண்ணுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

கோவை: பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம், கோவை மாவட்ட கலை, இலக்கிய... மேலும் பார்க்க

மருதமலையில் தைப்பூசத் திருவிழா இன்று தொடக்கம்: பிப்.11 இல் தேரோட்டம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகி... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாா்: தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

கோவை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவை வைசியாள் வீதி, ராஜ வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்கலாமா?

பழனி முருகன் கோயிலுக்குச் செல்பவா்கள், பொதுவாக ராஜ அலங்காரத்தையே பாா்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறாா்கள். ஏன்? அது சரியா? முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்... மேலும் பார்க்க

நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கோவை: நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, கணபதி காவலா் குடியிருப்பு சாலையைச் சோ்ந்தவா் சுபலட்சுமி (38), கணவா் பிரிந்து சென்றுவிட்... மேலும் பார்க்க

கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்க்கக் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்த்து வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக... மேலும் பார்க்க